கொங்கு நாட்டில் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய கருவூர் நகருக்கு தெற்காக 4.7 கி.மீ தொலைவில் கரூர்-திண்டுக்கல் சாலையில் (வழி குஜிலியம்பாறை) அமைந்துள்ள ஊர் தாந்தோன்றிமலை. (அட்சரேகை 10.56 வ தீர்க்க ரேகை 78.05). இவ்வூர் இங்குள்ள மலை தானாகத்தோன்றிய மலை என்ற அடிப்படையில் தாந்தோன்றிமலை என்ற காரணப்பெயரால் வழங்கப்படுகிறது. இம்மலை நீளமான சிறிய குன்றினைப் போன்று அமைந்துள்ளது. குன்றின் கிழக்குப் பகுதி சரிவாகவும் மேற்குப் பகுதி உயர்ந்தும் காணப்படுகிறது. தாந்தோன்றிமலை திருச்சிராப்பள்ளியிலிருந்து 76 கி.மீ. வடமேற்கிலும் ஈரோட்டிலிருந்து 54 கி.மீ தென்கிழக்கிலும் நாமக்கல்லிலிருந்து 45 கி.மீ. தென் மேற்கிலும் அமைந்துள்ளது. போக்குவரத்து தாந்தோன்றிமலைக்கு கருவூர் மாநகரில் இருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன. கரூவூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் கருவூர் நகரப் பேருந்து...